Meter History

Meter History

2016ம் ஆண்டு யாழ் மாவட்ட அரச அதிபர் திரு.வேதநாயகம் அவர்களும் யாழ்மாநகரசபை ஆணையாளர் திரு.வாகீசன் அவர்களும் மீற்றர் பொருத்துவது சம்மந்தமாக முச்சக்கரவண்டி சங்கத்தினரை அழைத்து சில கலந்துரையாடல்களை நடத்துவதாகவும் அத்துடன் முச்சக்கரவண்டி சங்கத்தினர்கள் யாழ்ப்பாணத்தில் நல்ல ஒரு மீற்றர் நிறுவனம் இல்லையென்று கூறுவதாகவும் கேள்வியுற்றோம்.
எங்கள் பொருளாதாரத்தின் ஒரு தூணாக இருக்கின்ற போக்குவரத்தை சீர் செய்வதன் மூலமாக நாங்கள் எல்லோரும் எங்கள் வளர்ச்சிக்கும் எங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் ஒரு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்ற முறையில் இந்த முச்சக்கரவண்டி மீட்டர் கட்டண மானி பொருத்தும் பணியை பொறுப்பில் எடுத்தோம்.
2016ம் ஆண்டு அவர்களின் வேண்டுகோளுக்கமைய நாங்கள் விற்பனை செய்யும் அனைத்து கட்டணமாணிகளுக்கு 1 வருட கால உத்தரவாதமும் 5 வருடத்துக்கு நாங்கள் அதற்கு பராமரிப்பு உத்தரவாதமும் வழங்கியதை தொடர்ந்து மீற்றர்கள் 2016 2018 2019ம் ஆண்டுகளில் பொருத்தப்பட்டு> அதற்கான சட்டம் இயற்றா படாமலும் பாவனைக்கு வராததாளும் அவர்களின் முயற்சி தோல்வி உற்றது. ஆனால் 2017/09/22 மோட்டர் முச்சக்கர வண்டிகளின் ஒழுங்கு விதிகள் இயற்ற பட்டும், மீண்டும் அதில் திருத்தம் மேற்கொள்ள பட்டும் 2018/01/01இல் அச்சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இருந்த போதிலும் வைரஸ் தொற்று காரணமாக பிற்போடப்பட்டு, அவை வடமாகாணத்தில் 2022/06/15 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கெளரவ போக்குவரத்து அமைச்சரின் உத்தரவின் படி ஆணி 26 முதல் முச்சக்கரவண்டி கட் டணமாணி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது (இணைப்பு அ).
வைரஸ் தொற்றுக்கு பின்னர் இன்றுவரை எங்கள் நிறுவனம் ஒரேஒரு புதிய கட்டணமானியை விற்பனை செய்ததுடன்> 44 ஓட்டுனர்களுக்காகவும் நாங்கள் நாங்கள் அரசாங்க அதிபருக்கும்> ஆணையாளருக்கும் கொடுத்த வாக்குறுதிக்கமையவும் கட்டணமணியின் பராமரிப்பை(கடனமானி வல்லுநர் ஒருவர் தேவை) மிகுந்த இழப்புக்களுக்கு மத்தியில் நடைமுறை படுத்தியவண்ணம் உள்ளோம்.
சன்சத்தி ரேடர்ஸ் நிறுவனத்தினூடாக கடந்த வருடமும் வலம்புரி பத்திரிகையின் இறுதி பக்கத்தில் முச்சக்கர வண்டிகளின் கட்டணமானி தொடர்பாக விழிப்புணர்வு வெளியிடப்பட்டது. அந்த பத்திரிகை விளம்பரத்தை நாம் இங்கு இதனுடன் இணைக்கின்றோம்.
Scroll to Top