The Strength of Sunsakthy Traders, is Providing first-class materials from the highest quality manufacturers, Installing them perfectly, and Providing Long time Maintenance services at reasonable charges.
சன்சக்தி ரேடர்ஸ் மிக உயர்தர தயாரிப்பாளர்களின் முதல்தர கருவிகளை துல்லியமாக நிறுவி, இலங்கையிலேயே மிக நீண்டகால பராமரிப்பை வழங்கி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள ஒரு ஸ்தாபனம் ஆகும். நியாயமான விலையில் பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குவது எங்கள் நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

Our Services

CCTV Installation

Link Lanka Meter

Solar Installation

Security systems

Intercom Systems

நாங்கள் வடக்கில் சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்தும் நோக்குடன் பல திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அடிப்படை மாற்றத்துக்கான மீன் வளர்ப்புத்திட்டம்

பொதுநல மீன் வளர்ப்பு அபிவிருத்தி திட்டம் (Welfare Aquaculture Development Scheme) இலங்கையில் 60 சத வீதமானவர்கள் மூன்று நேரம் உணவு சரியாக உண்பதற்கு வழியில்லாமல் இருப்பதை அறிந்திருப்பீர்கள். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறு பங்காற்றும் விதமாக பொதுநல மீன் வளர்ப்பு அபிவிருத்தி திட்டம் (Welfare Aquaculture Development Scheme) ஒன்றை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
நோக்கம்: நமது தாய்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளில் ஒன்றாக, கிடைக்கக்கூடிய வளங்களையும் சாதகமான சூழ்நிலைகளையும் பயன்படுத்தி, சுற்றுச்சூழலிற்கு உகந்த மற்றும் நிலையான முறையில் ஒருங்கிணைந்த மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பை ஊக்குவிப்பதே எங்கள் தொலைநோக்குப் பார்வையாகும்.

எங்கள் WADS திட்ட முன்னேற்ற அறிக்கை

06/12/2022 அன்று பொதுநல மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 16/03/2023 அன்று மெலிஞ்சிமுனை மக்களிற்கு அப்பகுதி பிரதேச செயலகத்தால் இத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஒன்று நடத்தப்பட்டது.

ஊர்காவற்துறை DS அலுவலகத்தில் 22-11-2023 அன்று நடந்த WADS திட்டத்திற்காக இடம்பெற்ற கலந்துரையாடல்.

எங்கள் திட்ட நோக்கத்தினை 2023 இல் அரசாங்க அதிபராக பதவி வகித்த திரு அம்பலவாணர் சிவபாதசுந்தரன் அவர்கள் தெரிந்து கொண்டு வட மாகாணத்திற்கு மிகவும் அத்தியாவசியமான திட்டம் என்றும் அதனை நீங்கள் செயற்படுத்த 13 திணைக்களங்களில் சென்று அனுமதி பெற்றுக்கொள்ள தேவையில்லை என்றும் அதற்க்கு பதிலாக ஓர் ஒருங்கிணைப்பு கூட்டம் ஒன்றை கூட்டி அதற்க்கு நீங்கள் பதிலளித்தால் எமது திட்டத்தை எவரும் தடுக்க மாட்டார்கள் என கூறி திரு அம்பலவாணர் சிவபாதசுந்தரன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு நான்கு நாட்களிற்கு முன்னர் ஸ்ரீ மோகனன் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தார்.

அதற்கான அழைப்பிதழ் கீழே உள்ளது.

WADS invitation

அது மட்டுமன்றி எமது திட்டத்தினை சிறந்த முறையில் முன்நகர்த்துவதற்காக இந்தியாவில் உள்ள மீன் வள ஆராய்ச்சி நிலையங்களிற்கும் செல்ல உள்ளோம். அதற்கான அனுமதிகளும் கிடைக்கப்பெற்று வருகின்ற மாதமளவில் இந்தியா செல்ல உள்ளோம்.

வடக்கின் பொருளாதாரத்தையும் மக்களின் உணவுத்தேவை, பொருளாதாரத்தேவையை பூர்த்தி செய்யும் ஓர் விடயமாக இது காணப்படும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. எமது திட்டத்தின் இறுதி பகுதியினை நெருங்கியுள்ளோம்.

போக்குவரத்து துறையில் மாற்றத்தை ஏற்படுத்தல்.

2015/2016 ஆம் ஆண்டுகளில் அரச அதிபர் திரு நாகலிங்கம் வேதநாயகமும், மாநகரசபை ஆணையாளர் திரு வாகீசன் அவர்களும் வடக்கில் மீண்டும் முச்சக்கரவண்டி கட்டணமானி பாவனையை நடைமுறைப்படுத்த விரும்புவதாகவும் ஆனால் வட மாகாணத்தில் எந்த ஒரு முச்சக்கரவண்டி கட்டணமானி நிறுவனமும் செயற்படவில்லை என்றும் ஆதங்கப் படுவதனை கேள்வியுற்றோம்.
2013 ஆம் ஆண்டு முச்சக்கரவண்டி கட்டணமானி பொருத்தியவர்களோ அல்லது வேறு எவரும் இந்த பொறுப்பை ஏற்க முன்வராத நிலையில்தான் நாங்கள் பொறுப்பேற்று இப்பணியை மேற்கொண்டோம்.
எங்கள் பொருளாதாரத்தின் ஒரு தூணாக காணப்படுகின்ற போக்குவரத்தை சீர் செய்வதன் மூலமாக எங்கள் நாட்டினதும், எங்கள் அனைவரினதும் வளர்ச்சிக்காகவும் ஒரு பெரும் பங்களிப்பை வழங்க முடியும் என்று பெரும் எதிர்ப்பிற்கு மத்தியில் 2015/2016 ஆம் ஆண்டு முதல் வாகனங்களுக்கு கட்டணமானி பொருத்தும் திட்டத்தை மீண்டும் கையில் எடுத்து அதனை வடக்கில் அமுலாக்க பல பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
எங்கள் 7 வருட விடா முயற்சி பவற்றி அளித்துள்ளது!

வடமாகாண பயணிகள் நலன்புரிச் சங்கம்

வடமாகாண பயணிகள் நலன்புரிச்சங்க அங்குராட்பண ஆலோசனை கூட்டம் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் காரியாலய மண்டபத்தில் 19/09/2020 அன்று காலை 9.30 மணியளவில் அமைப்பாளர் திரு.செ.கனகராஜா ரமணாகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் சகல மாவட்டங்களிலுமுள்ள பல பாதைகளில் பலவிதமான வாகனங்களிலும் பயணிக்கின்ற மக்களின் பயணங்களில் ஏற்படும் சிக்கல்கள், சிரமங்களை நாம் அனைவரும் ஒன்றுகூடி தொகுத்து ஆலோசித்து அவைகளை தீர்க்கும் வழிவகைகளை உரிய திணைக்களங்கள் அமைப்புக்களுடன் இணைந்து தீர்வுகள் காணும் நோக்கில் இவ்வமைப்பை கொண்டுவர முயற்சிப்பதே நோக்கமாக கூட்டப்பட்டது.

உலக தமிழரை ஒன்றினைத்தல்

உலகத்தமிழரை ஒன்றிணைக்கும் நோக்குடன் எங்களால் 2022 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வடகணினியம் என்ற ஒரு கூட்டமைப்பு “ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான கூட்டமைப்பு”(Chamber for integrated development) என்ற பெயரில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

யாழ்ப்பாணம் வர்த்தக தொழித்துறை மன்றத்தின் நடைமுறையை மேம்படுத்துதல்

யாழ்ப்பாணம் வர்த்தகத் தொழில் துறை மன்றம் (Chamber of commerce and industries Yarlpanam), வடக்கின் மிக பெரிய ஒருங்கிணைப்பு நிறுவனம். சில இயக்குனர்களின் தவறான செயற்பாடுகளிற்கு எதிராக எவரும் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது என்ற நம்பிக்கையை இழந்து நின்றபொழுது எமது சொந்த பணத்தை செலவுசெய்து இவர்களை எதிர்த்து நின்றுகொண்டிருக்கின்றோம். இந்த நிர்வாகத்திற்கு எதிராக முதலில் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்திலும், அதன் பின்னர் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளோம். இவர்களை தேர்தல் நடத்த முடியாதபடி இடைக்கால தடையுத்தரவு பெற்று இவர்களின் செயற்பாட்டை முடக்கி வைத்துள்ளோம். இப்போது பெரும்பாலான பிரச்சினைகள் முடிவுக்கு வந்துள்ளதால் எங்கள் இடைக்கால தடை உத்தரவை நீக்கி ஐனநாயக முறையில் தேர்தல் நடத்துவதற்கு எங்களால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கி கொண்டு இருக்கின்றோம்.
குரல் பதிவு - சீசீஐவையில் தேர்தல் நடாத்தக்கூடாது என்ற இடைக்கால தடை உத்தரவை நீக்கப்பட்டுவிட்டது
மாபியாக்களின் கோட்டையாக மாறிவிட்ட எங்கள் இன்றைய சீசீஐவை.!

AGM இன் பரபரப்பு செய்திகள்

குரல் பதிவு - நான் உள்வாங்கப்படவேண்டும் என்பது இங்கு முக்கியமான விடயம் இல்லை 15-4-2023

சேவை

எங்களிடமிருந்து பாதுகாப்பு காணொளிகருவிகள் (CCTV), பாதுகாப்பு கருவிகள்(Security System), சூரிய மின்படல கருவிகள்(Solar System), வரவுப்பதிவேட்டு கருவிகள்(Time attendance system), உள்ளக்கத்தொடர்பு வலையமைப்புகருவிகள் (Intercom System), மற்றும் உள்ளக வலையமைப்புக்களை(Intranet System) பெற்றுக்கொள்ளலாம்.
எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கேற்ப அதன் நிறுவல்களும் அதற்குரிய பராமரிப்பையும் வழங்குகின்றோம்.
2023ம் ஆண்டு மென்பொருள்/இணைய உருவாக்குதல் (Software/Web Development) , மென்பொருள்/இணைய கற்பித்தல்(Software/Web Teaching ) ஆரம்பிக்கவுள்ளோம்.
As the technology and prices of surveillance cameras are changing rapidly, contact us at 077 552 7099 or 021 221 7994 to find out the details you need. It is our pleasure to help you!
கண்காணிப்பு கேமராக்களின் தொழில்நுட்பம் மற்றும் விலைகள் வேகமாக மாறி வருவதால், உங்களுக்குத் தேவையான விவரங்களைக் தெரிந்துகொள்ள எங்கள் தொலைபேசி 077 552 7099 அல்லது 021 221 7994 என்ற இலக்கங்களில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். நாங்கள் உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகிறோம்!
Scroll to Top